Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கையில் சிறைக் கைதிகள் ஆறுபேர் சுட்டுக் கொலை

Published on புதன், 15 ஏப்ரல், 2009 4/15/2009 03:08:00 PM // , , ,

இலங்கை சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆறு பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொழும்பு அருகே உள்ள கலுதாரா சிறையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிறைக்கம்பிகளை அறுத்து சிறையிலிருந்து தப்பிக்க 11 சிறைவாசிகள் முயன்றனர். சிறைக் காலவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் 6 கைதிகள் கொல்லப் பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றனர். ஒருவர் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார் என இலங்கை சிறைத்துறைத் தலைவர் கூறினார். தப்பிக்க முயன்ற ஒவ்வொருவர் மீதும் 4 அல்லது 5 கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வு குறித்து விசாரிக்க சிறப்பு புலணாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!