Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அருணாச்சலப் பிரதேச சுற்றுபயணம்: சீனா கண்டனம்!

Published on வியாழன், 9 ஏப்ரல், 2009 4/09/2009 06:23:00 AM // , ,

அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத் தலைநகர் இடாநகருக்குச் சென்ற பிரதிபா பாட்டீல், எல்லைப் பகுதியான தவாங்கைப் பார்வையிட்டார். இது தொடர்பாக சீனா அதிப்ருதி தெரிவித்தது.

சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது என்றும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகம் என்றும், இந்தியாவின் தலைவர்கள் அங்கு சுற்றுப் பயணம் செய்ய உரிமையுள்ளது எனவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்தபோதும் சீனா கண்டனக் குரல்களை எழுப்பியது இங்கு குறிப்பிடதக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!