Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இத்தாலி பூகம்பம் : பலி எண்ணிக்கை 235ஆக

Published on புதன், 8 ஏப்ரல், 2009 4/08/2009 10:23:00 AM // , , , , ,

கடந்த திங்கள் கிழமையன்று இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை நடந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இதுவரை சுமார் 200 முறை நில அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நில அதிர்வுகள் பூகம்ப பகுதியில் இருந்து தொலைவில் உள்ள ரோம் போன்ற இடங்களிலும் உணரப்பட்டன.

மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் மற்றும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த பூகம்பத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் அப்ருசோ பகுதியில் 500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களில் 100 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!