Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தல் விதி மீறல் பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு

Published on வியாழன், 9 ஏப்ரல், 2009 4/09/2009 06:55:00 AM // , , ,

உ.பி.யில் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான் உள்பட 11 பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான், எம்.எல்.ஏ. வீரேந்திர சிங் சிரோஹி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மஹேந்திர சிங் யாதவ் உள்பட 11 பாஜக தலைவர்கள் மார்ச் 30-ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்தி தேர்தல் விதியை மீறினர். இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 11 பேர் அளித்த பதிலும் திருப்தியாக இல்லை. இதனால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியர் சுஷில் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!