Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மும்பை தாக்குதல் விசாரனை : 109 சாட்சிகளை விசாரிக்க வேண்டும்

Published on சனி, 18 ஏப்ரல், 2009 4/18/2009 07:17:00 PM // , , , , , , ,

மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் கூறினார். அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுனர்கள் உள்பட பலரும் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் மொத்தம் 1820 சாட்சியாளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும் ஆனால் அவர்களில் 109 பேரிடம் மட்டும் விசாரனை மேற்கொள்ள வேண்டும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறினார்.

கசாப் பஹீம் அன்சாரி மற்றும் சபாதீன் அகமது ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதற்கான காவல்துறை திரட்டிய வரைகலை ஆதாரத்தை நிகாம் சமர்ப்பித்தார். தீவிரவாதிகள் பயன்படுத்திய GPS கருவிகள் ஐந்து கைப்பற்றப் பட்டதாகவும் அவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!