Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு - சசி தரூருக்கு

Published on சனி, 18 ஏப்ரல், 2009 4/18/2009 08:12:00 PM // , , , , , ,

கொச்சி : ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிந்து அரசியல்வாதியாய் மாறியுள்ள சசி தரூர் தேசியக் கொடியை அவமதித்ததாக் கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கப் பட்டது. 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்று இரு நபர்களின் பொறுப்பேற்பு அடிப்படையில் மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி கிருஷ்ணன் குட்டி பிணை வழங்கினார். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப் பட்ட போது சசி தரூர் குறுக்கீடு செய்தார் என்று அவர் மீது மனித உரிமை ஆர்வலர் ஜாய் கைதரத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!