Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது மூவர் கொலை!

Published on வியாழன், 12 மார்ச், 2009 3/12/2009 03:24:00 AM // , , , , ,

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமுற்றுள்ளனர்.

சப்ரா மாவட்டத்தில் இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோவிந்து யாதவ் மற்றும் நாராயன் யாதவ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமுற்றனர்.

ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மற்றொரு நிகழ்வில் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளது. மேலும் 16 பேர் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் காயமுற்றனர்.

நவடா மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக ஒரு இளைஞரது வீட்டில் இருந்த மரத்தை வெட்ட அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!