Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

ரெட் கிராஸ் அமைப்பைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்தியா.

Published on செவ்வாய், 3 மார்ச், 2009 3/03/2009 12:11:00 AM // , , , , , ,

யுத்தப்பகுதியினுள் அகப்பட்ட சாதாரண மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்க, ரெட் கிராஸ் போன்ற சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் எனவும் விடுதலை புலிகள் முன்வைத்த யுத்த நிறுத்த வாக்குறுதியை அங்கீகரிக்க இலங்கை அரசு தயாராக வேண்டும் எனவும் இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

கொல்கொத்தாவில், "தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பும் சமாதானமும்" என்ற செமினாரில் பேசும் பொழுது வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இக்கோரிக்கை விடுத்தார்.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்டுள்ள சாதாரண பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் மீது எவ்வித அனுதாபமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அதே நேரம், விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள கோரிய இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து இந்தியாவிலிருந்து அரசு சார்பாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற தங்களின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இலங்கை வெளியுறவு துறை செயலர் பலிதா கொஹானா கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!