Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தலித் பெண் கூட்டுக் கற்பழிப்பு : 6 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சிறை!

Published on சனி, 7 மார்ச், 2009 3/07/2009 09:54:00 PM // , , , , , , ,

குஜராத் மாநிலத்தின் படான் நகரில் 19 வயது தலித் மாணவி கூட்டாகக் கற்பழிக்கப் பட்ட வழக்கில், 6 கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களான மனீஷ் பர்மார், மஹேந்திரா பிரஜாபதி, அஷ்வின் பார்மர், கிரன் படேல், சுரேஷ் படேல் மற்றும் அதுல் படேல் ஆகியோரை கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

மேலும் இக்குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் படான் நகரில் மாநில அரசால் நடத்தப்படும் இக்கல்லூரியில் படித்த அந்த தலித் மாணவியை இந்த ஆறு ஆசிரியர்களும் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து கற்பழித்தனர் என்று இப்பெண்ணின் பெற்றோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் புகார் தெரிவித்தார்.

தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் மிகக் குறைவான உள் மதிப்பெண்களே வழங்குவோம் என்று இந்த ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!