Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய காவல்துறை தேடல்.

Published on சனி, 7 மார்ச், 2009 3/07/2009 08:02:00 PM // , , , , ,

கடந்த 1ம் தேதியன்று திருப்பூரில் நடந்‌த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஏளனமாகவும் பேசியதாக அவர் மீது திருப்பூர் வடக்குப் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்டையில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்வதற்காக திருப்பூர் காவல்துறையினர் சென்னை வந்தனர். அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று கருதி, அவரை பிடிப்பதற்காக தெரு முனையில் காத்திருந்தனர். அப்போது, வேலூருக்கு கிளம்பிய வைகோவின் காரில் அவர் ஒளிந்திருக்கலாம் என்று, கார் டிக்கி உட்பட அனைத்து இடங்களையும் தேடினர். ஆனாலும் அவர் சிக்கவில்லை.

ஒருவழியாக அவரை சென்னையில் கைதுசெய்த திருப்பூர் காவல்துறையினர் தாம்பரம் காவல்நிலையத்தில் அவரை முன்னிலைப் படுத்தினர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!