Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தலுக்குப்பிறகு சரத்பவார் பிரதமராக சமாஜ்வாதி ஆதரவு

Published on சனி, 7 மார்ச், 2009 3/07/2009 10:10:00 PM // , , , , ,

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரை எதிர்க்க மாட்டோம்; துணைநிற்போம் என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

தனியார் தொ.கா ஒன்றுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி பொதுச்செயலாளர் அமர்சிங், அதுபோல சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்."நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைத்திருக்கவில்லை. அரசியல் சூழல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாகவே அந்தக் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் நாங்கள் தனிக்குழுவாகச் செயல்படுகிறோம்" என்றார் அமர்சிங்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!