Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கல்யாண் சிங் மன்னிப்பை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

Published on வியாழன், 5 பிப்ரவரி, 2009 2/05/2009 10:56:00 PM // , , ,

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதுமே அதற்கு பொறுப்பேற்று தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதாகவும் பாபர் மசூதி இடிப்புக்காக தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொல்லியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பா.ஜ கவை வீழ்த்துவதற்காக முலாயம்சிங் யாதவுடன் அணி சேர்ந்து இருப்பதாகவும் கல்யாண்சிங் கூறியிருந்தார்.


முலாயம்சிங்குடன் கல்யாண்சிங் கூட்டு சேர்ந்ததை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு கூறி இருந்தும், கல்யாண்சிங் மன்னிப்பை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்து உள்ளனர்.

ஜாமியத்துல் உலமா அமைப்பு நிர்வாகி மவுலானா ஹமீது "கல்யாண்சிங்கின் இந்த மன்னிப்பு அரசியல் சந்தர்ப்ப விதம் ஆகும். இதை ஏற்க இயலாது" என்று கூறியுள்ளார். "இந்த குற்ற செயலுக்காக அவர் இறைவனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் அவர்.

பாபர் மசூதி நடவடிக்கை குழு முன்னாள் உறுப்பினர் செய்யது சகாப்தீன் "முஸ்லிம்களைபற்றி தவறாக கணக்கு போட்டுள்ளனர்.இது ஒரு அரசியல் நாடகம்" என்று கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலை கழக பேராசிரியர் மொகிபுல் ஹக் கூறுகையில், இந்துத்துவாவில் இருந்து மதசார்பற்ற அணிக்கு கல்யாண்சிங் வந்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டதற்காக முஸ்லிம்கள் ஓட்டுகள் சமாஜ்வாடிகட்சி எந்த வகையிலும் உதவாது என்றார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!