Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

ஈழ அகதிகள் பேருந்து

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 05:28:00 PM // , , , , ,

போர் நடக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை அரசின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயரும் போது புளியன்குளம் அருகில் பேருந்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமுற்றனர்.

விடுதலைப் புலிகள்தான் இந்த தாக்குதலைத் தொடுத்தனர் என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயகரா தெரிவித்ததாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நடக்கும் பகுதிகளில் தனியார் பத்திரிகைகளுக்குத் தடைவிதித்திருப்பதால் இராணுவத்தின் இந்த அறிவிப்பை உறுதி செய்ய முடியவில்லை.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!