Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 01:34:00 PM // , , ,

நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இதில் பத்து அமர்வுகள் இருக்கும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இத்தொடரில் தீவிரப் பங்காற்றும் என்று தெரிகிறது.

பொதுவாக, ரயில்வே மற்றும் பொது நிதிநிலை அறிக்கைகளுக்கான சிறப்பு கூட்டத்தொடராகக் கருதப்பட்டாலும், இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் என்று தெரிகிறது.

தீவிரவாதம், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் குறித்த பிரசினைகளை எதிர்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன. மேலும் ஒரு தேர்தல் ஆணையருக்கு எதிராக தலைமை ஆணையர் விடுத்த பதவிநீக்க கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்
மும்பை 26/11 குறித்த நீதிவிசாரணைக்கு பா ஜ க கோரிக்கை விடுக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரயில்வே யின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வெள்ளியன்றும் பொது நிதிநிலை அறிக்கை திங்களன்றும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!