Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அருணாச்சல பிரதேசத்தில் எஸ்மா சட்டம் அமுல்

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 06:34:00 PM // , , ,

அருணாச்சலப் பிரதேச மாநில அரசு அத்தியாவசியப் பணிகள் மேலாண்மை சட்டத்தை (ESMA) இன்று நடைமுறைப் படுத்தியுள்ளது.


6ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்த ஊதியங்களைப் போன்று தங்களுக்கும் முன் தேதியிட்டு நடைமுறைப் படுத்தி வழங்கக் கோரி இம்மாநில அரசு அலுவலர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்கும் முகமாக இன்றுமுதல் எஸ்மா சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே வேளை அலுவலர்களுக்கு ஜனவரி 2009 முதல் ஊதிய உயர்வையும் அறிவித்துள்ளது. ஆனால் அரசு அலுவலர்கள் ஊதிய உயர்வை ஜனவரி 2006 தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாரதீய ஜனதா கட்சி அரசு அலுவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!