Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 28, 2025

இடைக்கால நிதிநிலை அறிக்கை: நாளை

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 10:02:00 PM // , , , , ,

நடுவண் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (Interim Budget) நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வில் இருப்பதால், நிதியமைச்சக பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார். எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று ஓய்வில் இருக்கும் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பிரணாப், அவரிடம் நிதிநிலை அறிக்கையை காண்பித்து ஒப்புதலும் ஒப்பங்களும் பெற்றார். பிரதமர் பார்வையிட்ட பின்னர், குடியரசுத்தலைவரின் பார்வைக்காக நிதிநிலை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

நிதிநிலைஅறிக்கை மீதான அரசின் உரையையும் மன்மோகன்சிங் மேற்பார்வையிட்டார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!