Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவோம் : பா.ஜ.க.

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 01:52:00 AM // , , , , ,

பாரதீய ஜனதா ஆட்சியமைத்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக நாக்பூரில் இரண்டு நாள்களாக தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அயோத்தியில் மிகப் பெரிய அளவில் ராமர் கோவில் கட்டுவதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது என்று கூறினார். அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறோம். பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்தால் இதற்கென சட்டமியற்றப் படும் என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிள் இராமர் கோயில் கட்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் உள்ளது இல்லை என்று கூறி உள்ளன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!