Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாபர் மசூதியை அரசுதான் இடித்தது : ஆர். எஸ். எஸ். தலைவர்

பாபர் மசூதியை சங்பரிவாரம் இடிக்கவில்லை, அரசுதான் இடித்தது என்று ஆர். எஸ். எஸ் தலைவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாபூர் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஆர். எஸ் எஸ் தலைவர் சுதர்ஸன், பாபர் மசூதி அரசு ஆட்களால்தான் இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் பாபர் மசூதியை இடிக்கவில்லை என்று கூறினார்.

மாநிலத்தில் ஆட்சியிலிருந்து பாரதீய ஜனதாவின் பெயரையோ அல்லது மத்திய அரசு அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரையோ குறிப்பிடாத அவர், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று தான் அயோத்தியாவில் இருந்ததாகவும், பிரச்சனைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட முனைந்ததாகவும் ஆனால் அரசின் ஆட்கள் பாபர் மசூதியை இடித்ததால் அங்கு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!