Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா உலக நம்பர் ஒன் ஆகுமா?

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 10:10:00 AM // , , , , , , ,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையுடனான 5 ஆவதும் இறுதியானதுமான ஒருநாள் போட்டியை இன்று கொழும்புவில் ஆடுகிறது.

ஏற்கெனவே முந்தைய நான்கு ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று போட்டித் தொடரைக் கைப்பற்றி விட்ட இந்தியா, இந்தப் போட்டியிலும் வென்றால் உலக தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும்.
இலங்கை இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால், அவமானத்தைத் தவிர்க்க இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

சுமார் 16 ஆண்டு காலமாக உலக கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, முதன் முறையாக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, தற்பொழுது முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் இரண்டாம் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. இன்றைய இலங்கையுடனான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமானால் முதல் இடத்துக்கு இந்தியா முன்னேறும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய நேரம் 10 மணிக்கு ஆட்டம் துவங்கியுள்ளது.

ஜெயசூரியா மற்றும் தில்சன் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இதுவரை 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை 3 ரன்கள் எடுத்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!