Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Thursday, April 10, 2025

ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் 2 நாள் வேலை

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 06:48:00 PM // , , ,

6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், ஓய்வு வயதை 58 லிருந்து 60ஆக மாற்றக் கோரியும் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 


மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் அப்துல் ரகீம் ரேத்தரின் வேண்டுகோளைப் புறக்கணித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் நிதிச்சுமையைக் களைய வழிவகைகளை அரசு ஆராய்ந்து வருவதாக் கூறிய நிதியமைச்சர், இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!