Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

அயோத்தி: புதிய காமராக்கள் பதிக்க அனுமதி!

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 10:11:00 PM // , , ,

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது இருக்கும் மூன்று குளோஸ்ட் சர்க்யூட் டிவி காமராக்களை அகற்றிவிட்டுப் புதிய காமராக்கள் நிறுவ அலகபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது காமராக்கள் இருக்கும் அதே இடத்தில் உயர அளவில் கூட எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்ற கட்டளையுடன் பைசாபாத் டிவிசன் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களிடம் பேசுவதற்காகத் தற்பொழுது அவ்விடத்தில் உள்ள மேடையில் அதிக தூரத்திற்குப் பேச்சுகள் செல்லத்தக்க விதத்தில் உயர்தர ஸ்பீக்கர்கள் நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காமராவும் மேடையும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு தேவைகளுக்கும் மற்ற அவசரகட்டங்களிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!