Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

மகாத்மாவின் கொள்கைகளை சங்பரிவார்களிடமே காணமுடியும் - பா.ஜ.க.

Published on சனி, 7 பிப்ரவரி, 2009 2/07/2009 06:39:00 PM // , , , , , , ,

மகாத்மா காந்தியின் கொள்கைகளை சங்பரிவார்களிடமே காண முடியும். காங்கிரஸ் கட்சியினரிடம் காண முடியாது என்று பாரதீய ஜனதா கட்சி இன்று கூறியது.

காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் காந்தி என்ற குடும்பப் பெயர் சேர்ப்பதைத் தவிர எந்தவகை தொடர்பும் இல்லை. நாங்கள்தான் காந்தியின் கொள்கைகள் வழி நடந்து அவரது பணிகளைத் தொடர்நது கொண்டுள்ளோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று கூறினார்.

உலகப் பொருளாதார நெருக்கடியில் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள முதலாளித்துவமோ அல்லது ஏற்கனவே தோல்வியுற்றுவிட்டவோ கம்யூனிசமோ இந்தியாவுக்கு ஏற்புடையதன்றும் காந்தியின் பொருளாதார முறையே இந்தியாவுக்கு சரியான பொருளாதார முறை என்று பா.ஜ.க. நேற்று கூறியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களுக்குள் காந்தியை சங்பரிவாரங்களில் ஒன்றான ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான் என்பது வரலாறு.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!