Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 25, 2025

ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் யோசனை!

Published on திங்கள், 16 பிப்ரவரி, 2009 2/16/2009 09:02:00 PM // , , , , ,

பீகாரில் புத்தா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை என்ற நிறுவனமொன்று பல்மருத்துவப் படிப்புக்காக விளம்பரம் செய்தது. அதில் தங்களது கல்லூரி மகத் பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ளதாகவும், இந்திய பல்மருத்துவக் குழுமம் (Indian Dental Council) அக்கல்லூரி படிப்புகளை அங்கிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தது. அதை நம்பி ஏராளமானவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்தனர்.

கல்லூரியினர் பொய்யான விளம்பரம் செய்து தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மாணவர்களை கல்லூரிநிர்வாகம் ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால் அக்கல்லூரி நிர்வாகம் தலா இரண்டு இலட்சம் வீதம் 22 இலட்சம் அபராதம் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாணவர்களை கல்வியின் பெயரால் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் நலவழக்கு தொடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!