Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 19, 2025

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுதீ!

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 12:37:00 AM // , , , ,

மெர்போர்ன் நகருக்கு அருகில் கடும் சூட்டின் காரணமாகப் படர்ந்தக் காட்டுத்தீயில் சுமார் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மெல்போர்ன் நகரில் உச்சபட்சமாக 46.7 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக இரண்டாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் கடும் நாசம் விளைந்துள்ளது. பல கிராமங்கள் முழுமையாக தீக்கு இரையாகியுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

வெப்பக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுவது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சம்பமாகும். இவ்வாண்டு தாக்கிய மிக அதிகபட்ச வெப்பமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!