Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 11:06:00 PM // ,

மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

கோவை, பிப். 10: மாதா, பிதா, குருவை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று "சந்திரயான்-1' திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியது:

மாதா, பிதா, குரு மூவரையும் மதிக்க மாணவ சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்தி செயல்பட்டால் 2020-ல் இந்தியா வளமாக மாறும் என்றார். மயில்சாமி அண்ணாதுரை தந்தை மயில்சாமி, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் என்.போஸ், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சி.செல்லம்மாள், எஸ்.கோவிந்தசாமி, கல்விக்குழுத் தலைவர் தாமரைதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த மரக்கன்றுகளை மயில்சாமி அண்ணாதுரை நட்டார். செங்குட்டாம்பாளையம் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.அங்குசாமி நன்றி கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!