Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் - 27 பேர் பலி

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 01:26:00 AM // , , ,

ஆப்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.


சிறைத்துறை அலுவலகத்தில் இருவர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.  நீதி அமைச்சகம் மீது 5 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். மற்றொருவர் கல்வி அமைச்சகம் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக தாலிபான் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் 35 பேர் காயமுற்றதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் காபூல் வர இருக்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!