Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 23, 2025

பெரும் விமானவிபத்து

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 04:35:00 PM // , , , , , , ,

பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதால் 150 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

மும்பையிலிருந்து டெல்லி செல்ல இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC866 புறப்பட இருந்த ஓடுபாதையில், குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலுக்கான பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஒன்றும் இறங்க அனுமதிக்கப்பட்டதால் இந்த விபத்து நேரிட இருந்தது.
நல்லவேளையாக, விமானி ஹெலிகாப்டர் இறங்குவதை கவனித்துவிட்டதால், இந்த பெரும்விபத்து தவிர்க்கப்பட்டு 150 பயணிகள் உயிர்மீண்டனர்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதை முன்னிட்டு பிரதீபா பாட்டில் வருகைத் தருவதையொட்டி அவருக்கான பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் மூன்று மும்பைக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றே மேற்படி செய்தியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வால் மும்பை விமான நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது. ஒரே ஓடுபாதையில் இரு வானூர்திகளை அனுமதித்தது குறித்த விசாரணைக்கு முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!