Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 26, 2025

ஒருவரைப் போல் இன்னொருவர் - தண்டனையிலிருந்து தப்பிய இரட்டையர்!

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 09:51:00 AM // , , , , , , , ,

மலேசியாவைச் சேர்ந்த இரட்டையர் ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்ததால் மரண தண்டனையிலிருந்து தப்பினர்.

மலேசியாவைச் சேர்ந்த சதீஷ் ராஜ், சபரீஷ் ராஜ் என்ற இருவரும் இரட்டையர்கள். இருவரும் அச்சு அசலாக ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பர். 2003-ஆம் ஆண்டு இவர்களில் ஒருவர் 166 கிலோ கஞ்சாவையும் 2 கிலோ ஓப்பியம் போதைமருந்தையும் வைத்திருந்த போது பிடிபட்டார்.

இரட்டையரில் இன்னொருவரும் குற்றம் நிகழ்ந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டடதும், அரசு தரப்பு வழக்குரைஞர்கள் இரட்டையரில் எவர் குற்றம் செய்தவர் என நிரூபிக்க இயலவில்லை. மரபணு சோதனைகள் மூலமும் குற்றம் இழைத்தவர் இன்னார் தான் எனத் தெளிவாக நிரூபிக்க இயலவில்லை.

போதை மருந்துகள் கடத்தலுக்கு மலேசிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும். இருப்பினும் சதீஷ், சபரீஷ் இரட்டையரில் குற்றம் இழைத்தவர் இன்னார் எனத் தெளிவாக நிரூபிக்கப்படாததால், அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!