Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 21, 2025

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது :

Published on வியாழன், 19 பிப்ரவரி, 2009 2/19/2009 02:34:00 AM // , , , , ,

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும் உள்ளதாகவும் அவர் கூறினார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கூட இரயில் நிலையத்திற்கு வைக்க முடியாது என்று அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!