Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் பன்னாட்டு விமான நிலையம்

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 10:32:00 AM // , , , , , , ,


ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் பன்னாட்டு விமான நிலையம் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த முனையத்தில் விமான சேவையைத் துவக்கி வைத்தார். முதல் சேவையாக ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏர் இந்திய விமானம் தனது பயணத்தைத் துவக்கியது.


துபாய்-ஸ்ரீநகர் வி்மானசேவை கஷ்மீர் மக்கள் வணிக மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்று சோனியா காந்தி கூறினார்.

குறைந்த செலவு விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்க்கு வாரம் ஒரு சேவையை வழங்கும் என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறினார்.

1989க்கும் முன் கஷ்மீர் ஆசியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விங்கியது. தனி நாடு கேட்டு கஷ்மீரி இயக்கங்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டு சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கஷ்மீர் பள்ளதாக்குக்கு வந்து சென்றதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!