Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

இரண்டரை வயது குழந்தைக்கு எதிராக வெறிச்செயல்!

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 10:27:00 AM // , , ,

பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாடோடி கூட்டத்திலுள்ள இரண்டரை வயது குழந்தை மான பங்கம் செய்யப்பட்ட கொடூரம் கேரளாவில் நடந்துள்ளது.

கோழிக்கோடு மெடிக்கல் காலேஜின் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த நாடோடி கூட்டத்திலிருந்து இரண்டரை வயதான குழந்தை மானபங்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் பலத்தக்காயத்துடன் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையை இன்னும் கடக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கொடூரத்தைச் செய்தவர்களைக் காவல்துறை வலைவீசி தேடிவருகிறது.

நாடோடி கூட்டம், வேலை தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!