Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

ஈழப்பிரசினை: லயோலா கல்லூரி

Published on சனி, 7 பிப்ரவரி, 2009 2/07/2009 12:38:00 AM // , , , ,

நாட்டில் அரசியல் சமூக தளங்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது லயோலா கல்லூரி பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி மக்கள் கருத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஈழப்பிரசினை குறித்தும் கருத்துக்கணிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில் தமிழினத்தையே இலங்கை அரசு அழித்தொழித்து வருவதாக 86 விழுக்காடு தமிழ்நாட்டினர் கருத்து
தெரிவித்துள்ளனர்.

90 விழுக்காடு பொதுமக்கள் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் 68 விழுக்காட்டினர் தனி ஈழமே இப்பிரசினைக்கு தீர்வு என்று தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளால் இப்பிரசினையில் எந்த விளைவினையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 % பேர் அபிப்ராயம் சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியல் பலனை நோக்காமல் கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் இப்பிரசினையில் ஒன்றுபட்டு செயலாற்ற 86% பேர் கருத்தளித்துள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!