Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 11, 2025

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 06:51:00 PM // , ,

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம், பிப். 11: இறந்து 5 ஆண்டுகளான கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனாருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நாயானார் இறந்து விட்டதை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவிக்காததால் இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் உள்பட 19 பேர் மீது அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டிலும் நாயனாருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அவர் இறந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவித்து, அவருக்கு எதிரான வழக்கை முடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிபதி எஸ். கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது ஈ.கே. நாயனாருக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3 முறை கேரள முதல்வராக இருந்து ஈ.கே. நாயனார் கடந்த 2004 மே 19-ம் தேதி காலமானார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!