Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வன்முறை நாடுகள்: இலங்கைக்கு முதலிடம்

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 08:19:00 PM // , , ,

பொது மக்களுக்கு எதிராக அதிகமதிகம் வன்முறைகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது

பெல்ஜியம் தலைநகர் ப்ரெசெல்ஸில் 'உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம்' அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை :


இலங்கையின் வடபகுதியில் அந்நாட்டுப் படையினர் மேற்கொண்டுள்ள ராணுவ தாக்குதலில் பல அப்பாவிப் பொதுமக்கள் தினமும் கொல்லப்படுவதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவ தாக்குதல்கள் சேதம் விளைவித்து வருகின்றன.


விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களில் வெற்றியடைந்து வருவதாக இலங்கை அரசு கூறி வரும் போதிலும், ஏராளமான பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை அதைவிட மோசமடைந்துள்ளது.

உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் தாக்குதல்களில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக ஸ்ரீலங்காவின் வடபகுதி காணப்படுகிறது.அந்த வகையில் இப்பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதலால் பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதி, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ள மெடகாஸ்கர், அரசு படைகளுக்கு எதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் ரோறக் போராளிகளின் போர்ப் பகுதி போன்றவையும் உலகில் வன்முறை அதிக நிகழும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!