Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது

Published on வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 2/06/2009 01:12:00 PM // , , , , , , ,

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் உபயோகித்த 9 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


நேற்று இந்த மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பில் வந்து 20க்கும் அதிகமான பாகிஸ்தானிய மீனவர்களைக் கைது செய்து சென்றுவிட்டதாக பாகிஸ்தானிய மீனவர் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் அவ்வப்போது இவ்வாறு கைது செய்யப்படுவது கடந்த ஆண்டின் தொடக்கம் வரை நடந்து வந்தது. பின்னர் இருநாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த நல்லுறவைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டிருந்தன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!