Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஐ.பி.எல். ஏலம் : பிளின்டாப், பீட்டர்சன் முதலிடம்

Published on வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 2/06/2009 08:42:00 PM // , , , , , , ,

இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்துக்கான வீரர்களுக்கு நடந்த ஏலத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான ஆன்ட்ரூ பிளின்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் மிக அதிக விலை கொடுத்து வாங்கப் பட்டனர்.


கடந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதற்குத் தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப் பட்டு கடந்த ஆண்டு முதல் பின்பற்றப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் டோனி அதிகபட்சமாக 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை சென்னை சூப்பர் கிங் என்ற அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த ஆண்டுக்கான ஏலம் கோவா தலைநகர் பனாஜியில் இன்று நடைபெற்றது. இதில் பிளின்டாப் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் சுமார் 7 கோடியே 35 இலட்சம்) விலை போனார்கள். பீட்டர்சனை பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பிளின்டாபை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விலைக்கு வாங்கி உள்ளன.

ஆஸ்திரேலிய பவுலர் ஷான் டெய்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.8 கோடி ரூபாய்க்கும், தென் ஆப்ரிக்காவின் பால் டுமினி மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.7 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் பால் கோலிங்வுட் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ. 1.3 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீசின் பிடல் எட்வர்ட்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்), ஜெரோம் டெய்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா (டெல்லி டேர்டெவில்ஸ்), ரவி போபரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இலங்கையின் திலன் துஷாரா (சென்னை சூப்பர் கிங்ஸ்), வங்கதேசத்தின் அஷ்ரபுல் (மும்பை இந்தியன்ஸ்), மோர்டசா (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் ஏலம் போனார்கள்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!