Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கல்யாண விருந்து சாப்பிட்ட 300 பேர் வாந்தி

Published on திங்கள், 16 பிப்ரவரி, 2009 2/16/2009 02:27:00 AM // , , ,

குஜராத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜான்கர் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்துண்ட 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 200 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாம் நகரிலிருந்து இரண்டு மருத்துவக் குழுக்கள் இக்கிராமத்திற்கு விரைந்துள்ளதாக ஜாம் நகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

1 கருத்து

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!