Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பெப்சியில் கிடந்த பல்லி: 16,000 இழப்பீடு

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 12:58:00 PM // , , ,

கோவை மாவட்டம் பல்லடம் வீரபாண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திருப்பூரில் ஒரு அங்காடியில் பெப்சி குளிர்பானம் வாங்கித் திறந்த போது, அதில் பல்லி ஒன்று செத்து மிதக்கக் கண்டார். இதையொட்டி, குளிர்பானம் வாங்கியதற்கான அத்தாட்சி பெற்றுக்கொண்ட அவர், கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நுகர்வோர் மன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் இரத்தினம் ஆகியோர் தங்களது தீர்ப்பில் செந்தில்குமாருக்கு அங்காடி உரிமையாளர், மொத்த விற்பனையாளர், குளிர்பான நிறுவனம் மூன்றும் சேர்ந்து ரூ.16,000/= இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!