Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

பச்சிளம் குழந்தையை கூவி விற்க முனைந்த

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 01:21:00 PM // , , , , ,

நான்காவதாகவும் பெண்குழந்தை பிறந்ததால், அப்பெண்குழந்தையை நகரில் கூவி விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது பற்றிய செய்தி வருமாறு:

கண்டமங்கலம் அருகே உள்ள துலுக்காநத்தம் காலனியைச்சேர்ந்தவர் வில்வநாதன். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி லலிதா(வயது 35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லலிதாவுக்கு 4-வதாக அழகான பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்தது பற்றி தகவல் தெரியவந்தால் கணவர் திட்டுவாரே என்று பயந்த லலிதா அந்த குழந்தையை விற்க முடிவு செய்தார்.

இதனால் அவர் துணைக்கு ஒரு மகளை அழைத்துக்கொண்டு பச்சிளம் குழந்தையுடன் கடலூருக்கு வந்தார். டவுன்ஹால் எதிரே பாரதிசாலையோரத்தில் பெண்களிடம் கூவி கூவி குழந்தையை விற்க முயன்றார். 20 ஆயிரம் ரூபாய் தந்தால் குழந்தையை தருவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து லலிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவளிடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். அப்போது 4-வது பெண் குழந்தையாக இருந்ததால் வறுமையின் காரணமாக குழந்தைய விற்க முயன்றதாக கூறினார்.

இதையடுத்து அவளையும், குழந்தையையும் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

வறுமை வாட்டுவதால் இந்தக் குழந்தையை என்னால் வளர்க்க முடியாது. எனவே அரசு இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் லலிதா கூறினார். உடனே குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சமூகநலத்துறை அதிகாரிகள் ஏற்று கடலூர் புதுப் பாளையத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!