Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 11, 2025

25 ரூபாய் இலஞ்சத்துக்கு 24 ஆண்டுகளுக்குப் பின்

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 12:13:00 PM // , , , , ,

பீகார் அரசு மருத்துவர் ஒருவர் கடந்த 1985 ஆம் ஆண்டு மருத்துவச்சான்றிதழ் வழங்குவதற்காக கடைநிலை ஊழியர் ஒருவரிடமிருந்து 25 ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

பாலகோவிந்த் என்ற அந்த மருத்துவர் பாட்னா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் மருத்துவச் சான்றிதழ் ஒன்றினுக்கு கடைநிலை ஊழியர் ஒருவரிடம் ரூ.25/- இலஞ்சமாகக் கோரியிருந்தார். அந்த கடைநிலை ஊழியர் காவல்துறையில் புகார் தெரிவிக்கவும், இரசாயனப் பொடி தூவிய ரூபாய் தாள்களை வழங்கும்படி காவல்துறை பணித்தது. திட்டமிட்டபடி, கையும் களவுமாக மருத்துவர் பிடிபட்டார்.

இவ்வழக்கில் கடந்த 1992ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்றுமாத சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் தன் செல்வாக்கால் மேல்முறையீடு என்ற பெயரில் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என்று இப்போது தீர்ப்பு வந்துள்ளது. 75 வயதாகிவிட்ட மருத்துவரை காவல்துறை தேடி வருகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!