Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

பிரபாகரன் வெளிநாடு தப்பினார்?

Published on திங்கள், 19 ஜனவரி, 2009 1/19/2009 06:58:00 PM //

ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்தியத் தாக்குதலில் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ரகசிய படகு நிர்மாணசாலையைத் தகர்த்ததாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லை தீவினை நோக்கி இராணுவம் நகரத்துவங்கிய நிலையில், பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லை தீவை நோக்கியை இராணுவத்தின் முன்னேற்றம் தற்பொழுது மாங்குளம்-முல்லை தீவு சாலைவரை வந்துள்ளது. மிக விரைவிலேயே முல்லைதீவினுள் இராணுவம் நுழையும் எனக் கருதப்படுகிறது.

புலிகளிடம் தற்பொழுது பயிற்சி பெற்ற வெறும் 1000 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் அவர்களும் முல்லை தீவின் உள் காட்டுப்பகுதியில் ஒளிந்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி சரத் போன்ஸகா கூறினார். புலிகளுக்கெதிரான போராட்டம் மிக விரைவிலேயே முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!