Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

இந்தியா பாகிஸ்தானை புரிந்து கொள்ள வேண்டும் -

Published on திங்கள், 19 ஜனவரி, 2009 1/19/2009 09:56:00 PM // , ,

இன்றுடன் பதவி முடியும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த கான்டலீசா ரைஸ் இந்தியா பாகிஸ்தானை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


பதவி முடியும் தறுவாயில் மூன்று தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கராவாதத்தை ஒடுக்குவதிலும் அக்கறை காட்டி வருவதாகவும் ரைஸ் அப்போது விவரித்தார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைய ஒப்புக் கொண்ட ரைஸ், இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையாக நடந்து கொண்டால் அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!