Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாலேகான் வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி!

Published on திங்கள், 19 ஜனவரி, 2009 1/19/2009 05:26:00 PM //

11 வயது சிறுமி உட்பட 6 பேர் மரணத்திற்குக் காரணமான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி நகர்கிறது!

வெடிகுண்டு தயாரிப்பில் திறமைசாலியான பிரவீன் முதலிக் எனும் நபரைத் தேடி, வழக்கை விசாரிக்கும் மும்பை தீவிரவாதத் தடுப்புப்படை கர்நாடகா விரைந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கெயுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான பிரவீனும் இருந்ததாக ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. வெடிகுண்டு தயார் செய்வதில் நிபுணனான இந்நபரைக் கைது செய்தால், தலைமறைவாக இருக்கும் மற்றும் இருவரைக் குறித்தத் தகவல்கள் தெரிய வரும் என ஏடிஎஸ் கருதுகிறது.

இதற்கிடையில் மும்பை ஏடிஎஸ், தங்களைச் சட்டவிரோதமாக கஸ்டடியில் வைத்ததாகவும் ஆகவே ஏடிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மத்திய பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் வழங்கிய புகாரை இன்டோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!