Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: குற்றம்சாட்டப்பட்டவர்

Published on வியாழன், 8 ஜனவரி, 2009 1/08/2009 09:16:00 PM //

அஸ்ஸாம் மாநிலத்தியில் கடந்த முதல் தேதியன்று நடைபெற்ற தொடர் கொண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாக காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்ட பிரன்ஜோல் தேகா என்பவர் காவல் துறையினரால் இன்று சுட்டுக் கொல்லப் பட்டார். பிஜு சரனியா மற்றும்  பம்பால் என்ற பெயர்களாலும் அறியப் பட்டு வந்த 20 வயதே ஆன இவர் உல்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் என காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.


அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மற்றும் நல்பாரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஹலிகுச்சி என்னும் கிராமத்தில் இவர் மறைந்திருந்த தகவல் அறிந்த காவல் துறையினர் இவரைச் சுட்டுக் கொன்றனர்.

புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!