Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

மாணவியின் கண்ணைக் குருடாக்கிய

Published on வியாழன், 8 ஜனவரி, 2009 1/08/2009 05:56:00 PM //

சட்டீஸ்கர் மாநிலம் ரய்ப்பூரில் உள்ள 6 வயதே ஆன பள்ளி மாணவி ஆசிரியையின் கேள்விக்குப் பதில் அளிக்காததால் கோபமடைந்த அந்த ஆசிரியை மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கிவிட்டார்.


கடந்த நவம்பவர் மாதம் இச்சம்பவம் நடந்ததாகவும் புதன் கிழமைதான் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறிய காவல் துறை அதிகாரி, அந்த ஆசிரியை குண்டூசி கொண்டு மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கியதாகக் கூறினார். இச்சிறுமியின் கண் குருடாகிவிட்டதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்தபின் அந்த ஆசிரியை தலைமறைவாகி விட்டதாகவும் அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

சிறுமியின் கண்ணைக் குணப்படுத்த ஆகும் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!