Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்

Published on திங்கள், 19 ஜனவரி, 2009 1/19/2009 12:24:00 PM // , , ,

தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் வட மாநில மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குறைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை எதிர்த்து இப்போராட்டம் நடைபெறுகிறது. தலைநகரில் இம்மாதம் வழக்குறைஞர்கள் நடத்தும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெற்றது.


வட மாநிலங்களான டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு கஷ்மீர் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறுவதாக வழக்குறைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.


0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!