நந்திகிராம் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ்
Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009
1/09/2009 09:42:00 PM //
இந்தியா
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு பெரும் கலவரம் நடைபெற்ற நந்திகிராம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரோஸா பீவி கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பரமானந்தா பாரதியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்டு கட்சியின் முஹம்மது இல்யாஸ் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.
வெற்றி பெற்ற பெரோஸா பீவி நந்திகிராமில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னின்று போராட்டம் நடத்தியவர். தன்னுடைய வெற்றியை இப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.