Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?

Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009 1/09/2009 10:01:00 PM //

கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்று பங்காரப்பா கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி காங்கிரசில் இருந்து வெளியேறிய பங்காரப்பா, "சோனியா காந்தி பிரதமர் பதவியை தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். இந்திய அரசியலை நன்கறிந்தவர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி அனுமதியளித்தால் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கும் இவரை மீண்டும் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள, காங்கிரசின் தற்போதைய கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பங்காரப்பா ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பா.ஜ.க.விலிருந்தும் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஷிமோகாவில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா எனும் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!