Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒதுக்கீடு கேட்கும் கப்பல் உரிமையாளர்கள்

Published on புதன், 7 ஜனவரி, 2009 1/07/2009 06:26:00 PM //

பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.


1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக எழும் புகார் குறித்து விசாரித்த போது, இந்திய நிறுவனங்கள் கப்பல்களைப் புதிதாக வாங்குவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அவர்கள் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் இந்திய கப்பல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் குல்கர்னி கூறினார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் 391.8 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இது 378.8 டன்னாக இருந்தது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!