Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

லாலு ஜப்பான் செல்கிறார்

Published on புதன், 7 ஜனவரி, 2009 1/07/2009 03:28:00 PM //

சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை திட்டத்திற்கு ஜப்பானின் கடன் உதவி பெறுவதற்காக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் செல்கிறார். சுமார் 1 வார பயணத்தில் அவருடன் இரயில்வே இணை அமைச்சர் வேலு, இரயில்வே போர்டின் தலைவர் ஜீனா மற்றும் இரயில்வேன் மூன்று உயர் அதிகாரிகளும் இம்மாதம் 11ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.


ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை (Japan International Cooperation Agency)யிடம் 450 பில்லியன் யென் (சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்) கடன் ஒப்பந்தம் ஏற்படும் என்று தெரியவருகிறது. இந்தத் தொகை இந்தியாவின் மேற்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை அமைக்க பயன்படுத்தப்படும். இந்தப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட வேண்டும் என்ற ஜப்பானின் கோரிக்கையை இரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டதுடன், ஜப்பானிடமிருந்து அதிக சக்தியுள்ள என்ஜின்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160 என்ஜின்கள் வாங்கப்படும் என்றும் கடன் தொகையில் சுமார் 30 சதவீதம் இதற்கென பயன்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!